11 வயது சிறுவனின் பரிதாப நிலை..! நடந்தாலோ, ஓடினாலோ எலும்பு முறியும்.. 57 முறை எலும்பு முறிந்துள்ளது!

 கரூரில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 57 முறை எலும்பு உடைந்து உள்ளதாக கூறப்படும் 11 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி இல்லாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

சஞ்சய் பிறந்த ஏழாவது நாள் முதலே எலும்பு சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது மரபணுப் பிறழ்ச்சி வகையைச் சேர்ந்த இந்த நோய் எலும்புகளை பாதித்து நடந்தாலும் ஓடினாலும் கைகளிலும் கால்களிலும் எலும்பு முறிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் சஞ்சய்க்கு இதுவரை 57 முறை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் 16 லட்ச ரூபாய் வரை செலவு செய்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசியைப் போட்டால் மட்டுமே சிறுவன் எழுந்து நடமாட முடியும் என்று கூறும் அவர்கள் அரசு தனியார் அமைப்பு கொண்ட உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post