சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் - காரணம் இதுதான்!
byAJAY SELVAN•
0
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். கடைசியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில், இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணிக்குக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதுவரை மொத்தம் 71 டெஸ்ட், 101 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஸ்டோக்ஸ், 8000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு, விக்கெட்களையும் குவித்து, பெஸ்ட் ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். தற்போது அவருக்கு 30 வயதுதான் ஆகிறது. இந்நிலையில் திடீர் ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டு, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பயிற்சியாளர் ஆஷ்லே கில்ஸ் இதுகுறித்து பேசுகையில், “உடல் நலம், மன நலம் இரண்டும் ஒருவருக்கு மிக மிக முக்கியம். ஸ்டோக்ஸ் தைரியமாக முடிவெடுத்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவு செய்தால், நிச்சயம் புத்துணர்ச்சி பெற்றுவிடுவார்.
மீண்டும் அவர் இங்கிலாந்து அணியில் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார். பென் ஸ்டோக்ஸ் சிறிது காலம் மட்டுமே கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்குள் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.