INDIA vs CHINA PAECHU vaarthai

ஒழுங்கா நாங்க சொன்னதை செய்யுங்க’... சீனாவிடம் இந்தியா காட்டம்

                      

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பிரச்சினையை தணிக்கவும், எல்லையில் இயல்பு நிலையை உறுதிப்படுத்தவும் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு லடாக் பகுதியில் இயல்பு நிலை திரும்ப வேண்டுமெனவும், பரஸ்பர ஒப்பந்தங்களை சீனா கடைப்பிடித்து எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் சீனாவிடம் இந்தியா தெளிவாக தெரிவித்துவிட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

லடாக்கில் உள்ள சுஷுல் என்ற இடத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று மதியம் 2 மணி வரை நீடித்தது. மிகவும் தீவிரமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான எல்லா பொறுப்புகளும் சீன ராணுவத்திற்கே இருப்பதாக இந்தியக் குழு தெரிவித்துள்ளது.

மிகவும் சிக்கலான இடங்களான பங்கோங் த்ஸோ, தெப்சங் ஆகிய இடங்களில் ராணுவப் படைகளையும், ஆயுதங்களையும் விலக்கிக் கொள்வது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் அதிகம் பேசப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒப்பந்தங்களை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் சீனாவிடம் தெளிவாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், சீனாவின் புதிய உரிமை கோரல்கள் குறித்து ஆட்சேபனை தெரிவித்த இந்தியக் குழு, முன்பு கடைப்பிடிக்கப்பட்டபடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கோக்ரா, ஹாட் ஸ்ப்ரிங்ஸ், கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் இருந்து சீன படைகள் விலகிவிட்டன. மேலும், இந்தியாவின் வலியுறுத்தலுக்கு ஏற்ப பங்கோங் த்ஸோவில் உள்ள ஃபிங்கர் ஃபோர் என்ற இடத்திலும் சீன ராணுவம் தனது படைகளை கணிசமாக குறைத்துள்ளது.








Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post